கோலியிடமும் மற்றும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின் – காரணம் இதுதான்

Steyn
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

Steyn

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் டி20 போட்டிகளில் விளையாடும் முடிவுடன் இருக்கிறேன் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக அடுத்த வரும் டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் பெரும் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் தெரிவித்ததாவது :

நான் டி20 தொடரில் விளையாடும் அளவிற்கு முழுத் தகுதியுடன் உள்ளேன். இருந்தும் தேர்வாளர்கள் என் பெயரை குறிப்பிடவில்லை மேலும் நான் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதும் எனக்கு சொல்லப்படவில்லை. பயிற்சி ஊழியர்கள் எனது பெயரை இடம்பெறாமல் செய்து விட்டார்கள் அதனால் என்னுடைய இடத்தை நான் இழந்துவிட்டேன்.

steyn 1

இதன் காரணமாக நான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடமும், இந்திய ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் நான் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதனால் இந்திய அணி கேப்டன் கோலிக்கும், கோடான கோடி ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement