நாங்கள் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் தோற்க இது மட்டுமே காரணம் – ஸ்மித் வேதனை

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

- Advertisement -

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

Surya kumar 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். அது போட்டிக்கு உதவவில்லை மேலும் நாங்கள் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியில் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை அதுவே தோல்விக்கு காரணமாக கருதுகிறேன். எங்கள் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

buttler

நாங்கள் இன்னும் பேட்டிங்கில் நிறைய சரி செய்ய வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து நாங்கள் அதிகம் பயப்படத் தேவையில்லை. எங்களது திட்டங்களை சரியாக பயன்படுத்தினால் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும். மேலும் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் எங்களால் சிறந்த துவக்கத்தை அளிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் இனி வரும் போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை அளித்து வெற்றிக்காக போராடுவோம் என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement