அது சார்ஜா. இது துபாய். கொஞ்சம் புரிஞ்சி ஆடுங்க. கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து – ஸ்மித் வருத்தம்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்து. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் அடித்தார். மேலும் இறுதி நேரத்தில் மோர்கன் சிறப்பாக விளையாடி 34 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த போட்டியில் மிகபெரிய சேசிங்கை செய்த ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 20 ஓவர்களின் முடிவில் அவர்களால் 9 விக்கெட்டுக்களை இழந்த 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரன் சிறப்பாக விளையாடி 54 ரன்களை அடித்தார். மற்றபடி யாரும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. மேலும் அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பாக கொல்கத்தா அணியின் இளம் வீரரான சிவம் மாவி 2 விக்கெட்டுகளையும், நாகர்கோட்டி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் மாகி தேர்வானார்.

mavi

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் கூறியதாவது : இந்த போட்டியில் எங்களது திட்டங்கள் சரியாக செல்லவில்லை டி20 கிரிக்கெட்டில் இதுபோன்று சில முறை ஏற்படுவது சகஜம்தான். இருப்பினும் சில இடங்களில் நாங்கள் முன்னேற வேண்டியது அவசியம். கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கை துவங்கியதும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்தோம். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் எங்களது அணி வீரர்கள் சிலர் சார்ஜா மைதானத்தில் விளையாடுவது போல் விளையாடினார்கள். ஆனால் இம்முறை துபாய் மைதானம் அளவில் மிகப்பெரியது. இதனால் போட்டியில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. இந்த மைதானத்தின் அளவுகளுக்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை.

mavi 1

இதுவே தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக நினைக்கிறேன். மேலும் சில கேட்சிகளையும் நாங்கள் தவறிவிட்டோம். எங்கள் அணி சிறப்பான அணியாக இருந்தாலும் மைதானத்தில் சூழ்நிலை மற்றும் தன்மையை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும் இனி வரும் போட்டிகளில் இந்த மைதானத்தின் தன்மைக்கேற்ப விளையாடுவோம் என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement