ஸ்மித், வார்னர்க்கு கிடைத்த வாய்ப்பு…! மீண்டும் மட்டையை கையில் பிடித்த வீரர்கள் – Bancroft-க்கு வந்த சோதனை..!

warner
- Advertisement -

கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பான்க்ராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு அணியில் சேர மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்திருந்தார். ” வார்னர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர். மேலும் அவர் தலைமை ஏற்று விளையாடிய அணைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு அணியில் சேர மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை ” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது வந்த தகவலின்படி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய 3 வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்ணருக்கு மட்டும் ஆஸ்திரேலியா பர்ஸ்ட் க்ளாஸ் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சலுகை அளித்துள்ளது. மேலும் இந்த புகாரில் முக்கிய நபரான கேமரூன் பான்க்ராஃப்ட்-க்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப்படவில்லை.

smith

இந்த புகாரில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்ணர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணி விளையாடும் சர்வதேச போட்டிகளில் தான் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெற்கு ஆஸ்திரேலியா மாவட்ட கவுன்சில் என்பது ஒரு தனிப்பட்ட நிர்வாகம் என்பதால் இவர்கள் இருவரும் இந்த கவுன்சில் நடத்தும் லோக்கல் போட்டிகளில் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement