RR vs MI : இன்றைய போட்டியில் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் – காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை

Smith-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு பதிலாக புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். இந்த போட்டியில் டாஸ் போட வந்தபோது ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை செய்தார்.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்படாமல் இருப்பதால் இந்த கேப்டன்சி மாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து ஸ்மித் பேசுகையில் : ரஹானே தலைமையில் ஓராண்டிற்கு மேலாக ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து நிறைய தோல்விகளை சந்தித்ததால் அணி நிர்வாகம் மாறுதலுக்காக என்னை கேப்டனாக மாற்றியது.

rahane

என்னிடம் இருக்கும் திறமையை அணி நிர்வாகம் மதிக்கிறது. அவர்களுக்கு என் கடைமையை செய்ய நான் தயாராக உள்ளேன். எனவே, இந்த போட்டியில் எனது முழுத்திறனை பயன்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வேன் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement