சென்ற வருடம் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடை செய்யப்பட்டனர். பிறகு கடந்த ஒரு ஆண்டாக எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடாமல் இருந்த ஸ்மித் சமீபத்தில் வங்கதேச ப்ரீமியர் லீக்கில் கலந்து கொண்டு ஆடினார்.
அடுத்து ஐ.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக ராஜஸ்தான் அணியில் இணைந்து பயிற்சியினை மேற்கொள்ள ஸ்மித் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தார்.
இன்று அதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தடைந்தார். ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை சிறப்பாக வரவேற்றது. இதோ அந்த புகைப்பம் :
The wait is over for many @rajasthanroyals fans as @stevesmith49 arrives in Jaipur!#IPL2019 #SteveSmith #RajasthanRoyals #HallaBol pic.twitter.com/SPfohi0R1n
— Rooter – Live Sports App (@RooterSports) March 17, 2019
தடைக்கு பிறகு ஓராண்டாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஸ்மித்தின் ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை இந்த தொடரில் தெரியும். இந்த தொடருக்கு அடுத்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடரில் இவரது ஆட்டம் பொருந்து உலககோப்பை அணியில் இவர் தேர்வு இருக்கும் என்பதால் இந்த தொடர் அவருக்கு மிகவும் முக்கியமான தொடராகும்.