விட்ட இடத்திலிருந்து தொடராமல் இதை புதிதாக துவங்க இருக்கிறோம் – சி.எஸ்.கே பயிற்சியாளர் பேட்டி

Fleming
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14-ஆவது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் எஞ்சியுள்ள தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்க உள்ளது. இன்றைய முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

CSKvsMI

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி குறித்து பேசியுள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் கூறுகையில் :

வீரர்கள் அனைவரும் தற்போது கரீபியன் லீக் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டு ஐபிஎல்-க்கு திரும்பி உள்ளதால் நல்ல அனுபவம் இருக்கும். அதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எப்போது விளையாடினாலும் அது மகிழ்ச்சியாகவே இருக்கும். எனவே இந்த தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

CSK

இந்த இரண்டாம் பாதியை நாங்கள் மீண்டும் சிறப்பாக துவங்க இருக்கிறோம். இந்தியாவில் இருந்த அதே பார்முடன் விளையாட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து முதல் பாதியை போல் இல்லாமல் இந்த இரண்டாவது பாதியை மற்றொரு புதிய தொடராக நினைத்து இந்த இரண்டாம் பாதியை துவங்க உள்ளோம் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement