தோனிக்கு எதிராக இனி பவுலிங் போடறன்னு மட்டும் போய்டாதீங்க – ஸ்டோக்ஸ்ஸை எச்சரித்த ஸ்ரீசாந்த்

- Advertisement -

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சர்ச்சைக்குரிய வகையில் கோப்பையை கைப்பற்றியது . இந்த தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இந்திய அணி இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. லீக் சுற்றில் இந்திய அணி பெற்ற ஒரே தோல்வி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வியை இந்திய வீரர்கள் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று பென் ஸ்டோக்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆன் பயர்’ என்ற புத்தகத்தில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பற்றி பேசியுள்ளார். இதில் குறிப்பாக அந்த குறிப்பிட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அந்த புத்தகத்தில் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளதாவது…

11 ஓவர்களில் 112 ரன்கள் தேவை என்ற போது தோனி களமிறங்கினார். அப்போது சிக்சர்கள் விளாசுவதை விட ஒரு ரன் எடுப்பதையே குறிப்பாக கொண்டிருந்தார். ஆட்டத்தின் கடைசி 2 பந்துகளில் மீதம் இருந்த போதும் சிங்கிள் ரன் எடுத்தார். தோனி மற்றும் கேதர் ஜாதவ் கடைசிவரை ஆடினார்கள். அவர்கள் இருவரிடமும் வெற்றிக்கான நோக்கம் சிறிதளவும் இல்லை.

Dhoni 1

அவர்கள் போராடவில்லை. தோனி விளையாடுவதை பார்த்து நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவர்கள் விளையாடிய விதத்தினை பார்த்தபோது ரன் ரேட்டில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார் என்று தெரிந்தது. மேலும் இலக்கிற்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ அவ்வளவு அருகில் வர வேண்டும். விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் இந்திய அணியின் ரன் ரேட் நன்றாக இருக்கும். இதற்காகத்தான் ஆடினார்கள் என்று ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த கருத்துக்கு தனது எதிர் கருத்தை வெளியிட்டு உள்ள ஸ்ரீசாந்த் அவரை நேரடியாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் ஸ்ரீசாந்த் கூறுகையில் : பென் ஸ்டோக்ஸ் அவரது கேரியரில் இனிமேல் தோனிக்கு எதிராக ஆடக் கூடிய சூழல் வரக்கூடாது என நான் விரும்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன். ஏனெனில் தோனி இதுபோன்ற விமர்சனங்களை அவ்வளவு எளிதாக மறக்க கூடிய நபர் அல்ல.

Stokes

எனவே ஐபிஎல் போட்டிகளில் அல்லது இந்தியா இங்கிலாந்து இடையிலான போட்டியில் தோனி எதிராக பென் ஸ்டோக்ஸ் ஆடக் கூடிய சூழல் வந்தால் அவரை நிச்சயம் தண்டிப்பார். தோனியை அவரால் நிறுத்த முடியாது. மேலும் அவரது பந்துவீச்சை தோனி அடித்து நொறுக்குவார் என்று ஸ்ரீசாந்த் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement