தோனி இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும். சி.எஸ்.கே அணிக்காக இதை செய்வார் – சீனிவாசன் உறுதி

Srinivasan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் அவ்வப்போது அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தோனி ராஞ்சியில் தனது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் தோனி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இன்னும் எவ்வளவு காலம் தோனி கிரிக்கெட் விளையாடுவார் என்று அனைவரும் கேட்கிறார்கள் ? இந்திய அணியில் தோனி விளையாடினாலும், விளையாடா விட்டாலும் சிஎஸ்கே அணிக்காக 2021 ஆண்டு தொடரிலும் விளையாடுவார் என்பது மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். அடுத்த ஆண்டு அவர் ஏலத்தில் அவர் சிஎஸ்கே அணிக்காக தக்க வைக்கப்படுவார்.

Dhoni

அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் 2021 ஆம் ஆண்டு வரை சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவது நிச்சயம் என்று சீனிவாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாகவும், கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். சென்னை அணி தடை பெற்ற இரண்டு ஆண்டுகள் மட்டுமே புனே அணிக்காக அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement