தோனி இப்படி சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல. என்ன பேசறாரு அவரு – நேரடியாக எதிப்பை காட்டிய ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேசிய தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து பேசுகையில் : எந்த இளம் வீரரிடம்ம் தான் வெற்றிக்கான உத்வேகத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில் : தோனியின் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

- Advertisement -

இளம் வீரர்களிடம் உத்வேகத்தை பார்க்கவில்லை என்று தோனி கூறுவது சரியானது அல்ல. ஏனெனில் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடாத கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் இடம் என்ன உத்வேகத்தை தோனி கண்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜெகதீசன் நன்றாக விளையாடினார். ஆனால் அவர் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.

Dhoni

அதேபோன்று கரண் சர்மா சரியாக பந்து விசினார் ஆனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இப்படி கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் உள்ள தோனி எவ்வாறு இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. தோனி மிகப்பெரிய வீரர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்றாலும் தோனியின் இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆவேசமாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement