IND vs ENG : அடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் வேண்டும் – ஸ்ரீகாந்த்

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Shankar
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கரை அணியில் வைத்து சோதிக்கக் கூடாது.

- Advertisement -

அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்கலாம். ஏனெனில் ரிஷப் பண்ட் ஏற்கனவே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி சதம் ஒன்றை அளித்துள்ளார். அதனால் அவருக்கு இங்கிலாந்தில் விளையாடுவது ஒன்றும் புதிதல்ல. மேலும் விஜய் சங்கரை அணியில் சேர்த்து பேட்டிங்கில் அடிப்பாரா அடிப்பாரா என்று பார்ப்பதை விட நன்றாக பேட்டிங் செய்யும் பண்டை சேர்த்தால் அது இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும்.

Pant

மேலும் மிடில் ஆர்டரில் பண்ட் போன்ற அதிரடியாக ஆடும் வீரர்கள் இருந்தால் ரேட் விரைவாக வரவும் வாய்ப்பு உள்ளது என்று ஸ்ரீகாந்த் கூறினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement