MS Dhoni : இன்றைய போட்டியில் தோனி பங்கேற்பது குறித்து கருத்து கூறிய – ஸ்ரீகாந்த்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி இன்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், சென்னை அணியும்

msdhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி இன்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், சென்னை அணியும் மோத உள்ளன.

VK and MS

- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசியாக நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். மேலும், அவர் இன்று நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தோனி இன்றைய போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் ஸ்ரீகாந்த் கூறியதாவது : சென்னை அணி இதுவரை 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனால் சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் தோனி பங்கேற்க வேண்டாம் மேலும், உலகக்கோப்பை அருகில் வைத்து கொண்டு இந்த போட்டியில் அவர் சிரமம் எடுத்து விளையாடினால் காயம் அதிகரிக்கும்.

Dhoni

பிறகு, காயத்தின் விளைவு அதிகமாக மாறினால் அது சென்னை அணிக்கும், உலகக்கோப்பை இந்திய அணிக்கும்பெரிய பின்னைடைவு ஆகும். எனவே, இன்றைய போட்டியிலும் தோனி ஓய்வு எடுத்துக்கொண்டு அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Advertisement