அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக சன் ரைசர்ஸ் அணி தக்கவைக்க இருக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ

Williamson
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஹதராபாத் அணி தக்கவைக்க நினைக்கும் 4 வீரர்கள் இந்த பதிவில் நாம் காணலாம். அதன்படி அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக சந்தேகமே இன்றி அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் நபராக தக்க வைக்கப்படுவார்.

williamson 1

சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கேப்டனாக அவர் கைப்பற்றி உள்ளதாலும் ஏற்கனவே வார்னர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வில்லியம்சன் கேப்டனாக விளையாடி வருவதாலும் அவர் தக்கவைக்கப்படுவது உறுதி. அவரை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் உறுதியாக தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்த இரண்டு வெளிநாட்டு வீரர்களை சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்வதால் முகமது நபி, டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், ஜானி பேர்ஸ்டோ ஆகிய நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அணியில் இருந்து வெளியேறுவார்கள்.

Rashid

அதே போன்று இந்திய வீரர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் நடராஜன் ஆகியோரை மட்டுமே அந்த அணி தக்கவைக்க முனைப்பு காட்டுகிறது. ஏனெனில் மற்றபடி மணிஷ் பாண்டே, விஜய்சங்கர், ரித்திமான் சாஹா, கேதார் ஜாதவ் போன்ற பல வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதால் இந்த நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

Advertisement