சி.எஸ்.கே அணி வெளியேற்றிய கேதார் ஜாதவை 2 கோடி கொடுத்து வாங்கிய அணி – எந்த அணி தெரியுமா ?

Jadhav-2
- Advertisement -

இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வருகின்றனர்.

Jadhav 1

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதார் ஜாதவ் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் இன்று நடைபெற்ற மினி ஏலத்தில் அவரை யாரும் எடுக்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் முதல் சுற்றின் போது அவரை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை.

ஆனால் இரண்டாவது சுற்றின்போது அவரின் அடிப்படை வேலையான இரண்டு கோடிக்கு அவரை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோன்று சென்னை அணி விடுவித்த ஹர்பஜன் சிங்கை 2 கோடி மதிப்பில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SRH

கேதார் ஜாதவ் சென்னை அணிக்காக கடந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடிய வெறும் 62 ரன்களை மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆல்ரவுண்டரான இவர் கடந்த சீசனில் பந்து வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement