SRH vs DC : சன் ரைசர்ஸ் அணியின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Srh
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 45 ரன்களும், காலின் முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டும் அடித்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருகட்டத்தில் 72 ரங்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்த சன் ரைசர்ஸ் அணி 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை அடைந்தது. டெல்லி அணி சார்பில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது ரபாடா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

RABADA

இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது யாதெனில் கடைசி 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது தான். சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாட ஒரு கட்டத்தில் 10 ஓவர்களுக்கு 72 ரன்கள் 1 விக்கெட் என்ற நிலையில் இருந்து சன் ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வார்னர், பேர்ஸ்டோ தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடுவதில்லை. மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. மேலும், பந்துவீச்சு சிறப்பாக உள்ளதால் தான் மிஞ்சிய போட்டிகளில் ஜெயிக்கிறது. எனவே 2 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பந்துவீச்சாளர்கள் மற்றவர்கள் எல்லாம் பார்வையாளர்கள் போல் அந்த அணி விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement