மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை எனக்கூறி தெ.ஆப்பிரிக்க அணி சர்ச்சை வெற்றி – விவரம் இதோ

- Advertisement -

இலங்கை அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் 4 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்றது.

South africa

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் வித்தியாசமான முறையில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீலங்கா 49.3 ஓவர்களில் 225 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் அந்த அணியின் குசால் மெண்டிஸ் 56 ரன்கள் அடித்தார்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை குவித்து இருந்தது அப்போது மார்க் ராம் 67 ரன்களுடனும் மற்றொரு ஆட்டக்காரர் 28 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர் அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ஆனால் விளக்கின் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படாததால் போட்டி தென்ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக வெற்றியைத் தந்தது என்று நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி தென் ஆப்பிரிக்கா 41 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாபிரிக்க அணி 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Advertisement