இந்தியாவுலயே உன்னால ரன் குவிக்க முடியலைனா. அப்புறம் என்ன பண்றது – இந்திய வீரரை வெளுத்து வாங்கிய கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தாலும் இந்த தொடரில் அதிகமாக பேசப்படும் விடயமாக இருப்பது இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் தான். ஏனெனில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்.

KL Rahul 1

- Advertisement -

அந்த வகையில் தற்போது கே.எல் ராகுலின் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி சில கருத்துக்களை காட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்கலில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

அதோடு இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 35 ரன்கள் மட்டுமே சராசரி வைத்துள்ளார். அதோடு இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 38 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இப்படி மோசமான புள்ளி விவரங்களை வைத்திருக்கும் ராகுலின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

KL-Rahul

அதோடு அவர் மீது எழுந்த இந்த விமர்சனங்களுக்கு பதிலாக தற்போது இந்திய அணியின் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் கே.எல் ராகுலின் பார்ம் குறித்தும் பேசியுள்ள கங்குலி கூறுகையில் :

- Advertisement -

இந்தியாவில் விளையாடும் போதே உங்களால் ரன்னடிக்க முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என்று காட்டமான கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : முதல் பந்தில் ஹரிஸ் பேட்டை உடைத்து 2வது பந்தில் பாபர் அசாம் ஸ்டம்பை தெறிக்க விட்ட ஷாஹீன் அப்ரிடி

இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள். துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்வு குழுவினர் தொடர்ச்சியாக அவரை கவனித்து வந்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது திறனை பார்த்து வருவதாலேயே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்று கங்குலி வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement