உடனே கம்பேர் பண்ணாதீங்க.. எல்லாரும் தோனியாக முடியாது.. அவர் 3 ஃபார்மட்லயும் அசதத்துவாரு.. பாராட்டிய கங்குலி

Sourav Ganguly 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 1* என்ற கணக்கில் 4 போட்டிகளின் முடிவிலேயே இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இல்லாத குறை தெரியாத அளவுக்கு 22 வயதாகும் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் 655* ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்களை விட அசத்தும் அவர் 2 இரட்டை சதங்களை விளாசி 27 சிக்ஸர்களை பறக்க விட்டு இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். அதே போல 3வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜுரேல் 4வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் 90, 39* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

கங்குலி கருத்து:
அதை விட அப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டினார். மேலும் ரிசப் பண்ட் வந்தாலும் தோனி தன்னுடைய கேரியரில் எட்டிய அதே உயரத்தை துருவ் ஜூரேலும் எட்டுவார் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் அனைவராலும் எம்எஸ் தோனியாக முடியாது என்று அவரை வளர்த்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். அதே சமயம் நல்ல திறமையை துருவ் ஜூரேலை இப்படி ஒப்பிடாமல் முழுமையாக விளையாட விடுமாறு கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எம்எஸ் தோனி முற்றிலும் வித்தியாசமானவர். துருவ் ஜுரேல் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோனி தோனியாக உருவெடுப்பதற்கு 20 வருடங்கள் தேவைப்பட்டது. எனவே துருவ் ஜூரேலை விளையாட விடுங்கள். சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. குறிப்பாக அழுத்தத்தின் கீழ் அவரைப் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம்”

இதையும் படிங்க: நீங்க மட்டும் பெரிய கொம்பா? ஹர்டிக் பாண்டியாவுக்கும் பிசிசிஐ வைத்துள்ள செக்.. வெளியான தகவல்

“அவரிடம் நல்ல பொறுமை இருக்கிறது. அதே போல ஸ்பெஷல் திறமையை கொண்ட ஜெயஸ்வால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடியவர். 50 ஓவர், 20 ஓவர் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சமமாக விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் மகத்தான கேரியரை பெறுவார் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement