Steve Smith : இவர் இளம் வீரரை போன்று ஆடவில்லை. முதிர்ந்த வீரர்போல் ஆடினார் – ஸ்மித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Smith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Archer-1

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : நல்ல தொடக்கத்திற்கு பின்பு நடுவரிசையில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். ரியான் பராக் இளம் வீரரை போன்று ஆடவில்லை ஒரு முதிர்ந்த வீரரை போல் ஆடுகிறார். கோபால் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரும் அருமையாக ஆடினார்கள். வருண் ஆரோன் புதிய பந்தில் சிறப்பாக வீசினார் மேலும், அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசினார்கள்.

Riyan

தினேஷ் கார்த்திக் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அருமையான ஷாட்களை முதல் இன்னிங்சில் ஆடினார். ராஜஸ்தான் அணிக்காக இன்னும் சில போட்டிகளில் வெற்றியினை தேடித்தர விரும்புகிறேன். ஒட்டு மொத்தமாக சிறப்பாக ஆடி வெற்றிபெற்றோம் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement