என்ன இது முட்டாள் தானம் டூபிளிஸ்சிஸ்ஸை வெளுத்து வாங்கிய ஸ்மித் – விவரம் இதோ

Smith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டாஸ் கேட்க பவுமாவை அழைத்து வந்திருந்தார். ஆனால் இந்த முயற்சியும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. இந்தமுறையும் இந்தியாவே டாஸ் வென்றது. இந்நிலையில் டூபிளெஸ்ஸிஸ்ஸின் இந்த செயலை தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் கடுமையாக விமர்சித்துள்ளார். வர்ணனையில் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது.

toss

இந்த விடயம் நகைச்சுவையான விடயம் மட்டுமல்லாது பரிதாபகரமான விடயமும் கூட. இந்த செயல் அவரின் மோசமான மன நிலையை காட்டுகிறது. இதனை நான் ரசிக்கவில்லை மற்றும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது ஏனென்றால் டாஸ் நல்லது தான் ஆனால் டாஸ் மட்டுமே போட்டியை முடிவு செய்து விடாது. தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடி இருந்தால் இந்திய அணியை வீழ்த்த முடியும். இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்ததற்கு அவர்களின் ஆட்டமே காரணம் ஒரு போதும் டாஸ் முக்கிய காரணியாக அமையாது என்று ஸ்மித் காட்டமாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement