ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் – காரணம் இதுதான்

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Eng-vs-Aus

- Advertisement -

இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி வரும் 22ஆம் தேதி நாளை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்க மாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன் காரணம் யாதெனில் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது போட்டியில் 92 ரன்கள் குவித்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடும்போது ஆர்ச்சர் வீசிய பந்தில் கழுத்துப்பகுதியில் பலமாக அடி வாங்கிய ஸ்மித் இரண்டாவது இன்னிங்சில் விளையாடாமல் வெளியேறினார்.

Smith

பந்து தலைப்பகுதியில் பட்டாலும் மூளை நரம்புகள் அதிர்ந்துள்ளதாம் அதனால்அவரது காயம் தற்போது பரிசோதனையில் உள்ளது. எனவே இந்த போட்டியில் மூன்றாவது போட்டியில் அவர் விளையாடினால் மேலும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால் அவர் மூன்றாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தனது கழுத்துப் பகுதியிலும் தலைப்பகுதியும் வழி இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement