இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி டெஸ்ட் தரவரிசை மற்றும் ஒருநாள் தரவரிசை ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளார். அவரின் ஆட்டம் உலக கோப்பை தொடரில் சற்று மந்தமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராப் கீ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலியைவிட ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித்தை இந்த காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற சர்ச்சையான பதிவை இட்டுள்ளார்.
அதற்கு காரணம் யாதெனில் ஓராண்டு தடைக்குப் பிறகு உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய ஸ்மித் சிறப்பாக விளையாடினார். அதன் பிறகு தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து விரைவாக 25 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலியை தாண்டி சாதனை படைத்தார்.
இதன் மூலம் அவர் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அதனால் தான் சிறந்த வீரர் என்றும் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.