உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Smith
- Advertisement -

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்து அவர்களை தண்டித்தது.

warnersmith

அதன் பிறகு வார்னர் மற்றும் ஸ்மித் போன்றோர் கடந்த ஓராண்டாக எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க வில்லை. இருப்பினும், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று ஆடிவந்தனர். பிக் பேஷ் தொடரில் கூட ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடினர்.

- Advertisement -

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இவர்கள் இருவரும் ஆடிவருகின்றனர். இன்றோடு இவர்களது ஓராண்டு தடைகாலம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, இவர்கள் இருவரும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது பற்றியே தற்போது பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

smith

அதில் ஹெய்டன் கூறியதாவது : ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, கட்டாயம் இவர்கள் இருவரும் வரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement