டி20 உலககோப்பைக்கான அணித்தேர்வு இந்த அடிப்படையில் தான் இருக்கும் – சூரியகுமார் யாதவ் கருத்து

SKY
- Advertisement -

அடுத்த ஆண்டு 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே சொந்த மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்த இந்திய அணியானது இம்முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று நோக்கத்துடன் இளம் வீரர்களை கொண்ட பலமான அணியை கட்டமைத்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர் என வெறும் 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது.

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணித்தேர்வு எந்த அடிப்படையில் நிகழும்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கும் வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட அணிதான் விளையாடி வருகிறது.

- Advertisement -

எனவே இதே அணி டி20 உலக கோப்பை தொடருக்காக தேர்ந்தெடுக்கப்படுமா? அல்லது சீனியர் வீரர்களையும் இணைத்து டி20 அணி அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் கூறுகையில் : இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம்.

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்கா நம்ம ரிங்கு சிங் வருவார்னு அவங்க எதிர்பாக்குறாங்க.. கவாஸ்கர் பேட்டி

ஏனெனில் இடையில் நமக்கு ஐபிஎல் தொடரில் அனைவருக்குமே 14 போட்டிகள் காத்திருக்கிறது. எனவே ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் என்று உலககோப்பை அணித்தேர்வு இருக்கும் என்று கருதுகிறேன். அதோடு நம் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே தற்போது நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். எனவே நிச்சயம் ஒரு சமமான அணியே தேர்வு செய்யப்படும் என்று தான் நம்புவதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement