சொந்த ரெக்கார்டை விட அணியின் வெற்றியை முக்கியமானது கெத்தாக பேசிய – மும்பை அணியின் இளம் வீரர்

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

pandya 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் முன்னணி வீரரான சூர்யகுமார் யாதவ் இந்த போட்டி குறித்து கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக நான் கருதவில்லை. இருப்பினும் இந்த மைதானத்தில் பாசிட்டிவாக விளையாடி பல ஓவர்களை பிடிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி இந்த போட்டியின் முடிவில் நான் சிறப்பாக விளையாடியதாகவே கருதுகிறேன்.

- Advertisement -

மும்பை அணியில் விளையாடும் போது எனக்கு நல்ல ஃப்ரீடம் கிடைக்கிறது. அதன் மூலம் நான் சிறப்பான ரன்களை எடுத்து வருகிறேன். அதுமட்டுமின்றி அணிக்காக இறுதிவரை பேட்டிங் செய்து என்னுடைய பொறுப்பை நான் காண்பிக்க வேண்டும். இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

SKY

நான் 500 ரன்கள் எடுப்பது பற்றி எல்லாம் நினைப்பது கிடையா.து சொந்த சாதனைகளை விட அணியின் வெற்றியும், அணிக்கு என்ன தேவையோ அதை அளிக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது என்று சூரியகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement