2 ஆவது டி20 போட்டியிலும் தமிழக வீரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம். டாசுக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ் எடுத்த முடிவு

SKY-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது சற்று முன்னர் திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியே இந்த போட்டியிலும் விளையாடும் என இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார். இதன் காரணமாக பெஞ்சில் இருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், ஷிவம் துபே மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

- Advertisement -

இருப்பினும் இந்த தொடரில் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளதால் தொடரை கைப்பற்றிய பின்னர் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா? – வெளியான முழு லிஸ்ட் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகேஷ் குமார், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement