ரெய்னாவின் 3 ஆம் இடத்தில் இவரை களமிறக்குங்கள். ஆனால் அது தோனி இல்லை – சிவராமகிருஷ்ணன் ஐடியா

LSK
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது. முதலில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் திடீரென அந்த அணியில் உள்ள 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் இரண்டு வீரர்களும் அடக்கம். இதனால் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சற்று தாமதமாக பயிற்சியை துவங்கியுள்ளனர்.

csk 1

- Advertisement -

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரும் துணைக்கேப்டனுமான ரெய்னா அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் சொந்த பிரச்சனை காரணமாக இந்தியா திரும்பினார். இந்தியாவிற்கு திரும்பிய அவர் தான் இந்தியாவிலே பயிற்சி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தான் மீண்டும் துபாய் திரும்ப தயாராக இருப்பதாகவும் ரெய்னா வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இன்னும் துபாய் செல்லவில்லை. மேலும் அவர் மீண்டும் அணியில் இணைய நிர்வாகமும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் ரெய்னா விற்கு மாற்று வீரரை தேடும் கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. பலரும் தோனியை அந்த மூன்றாம் இடத்தில் இறங்க அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான சிவராமகிருஷ்ணன் வித்தியாசமாக ஒரு வீரரை களமிறக்க யோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்.

Curran

சாம் குரன் மூன்றாவது இடத்தில் இறங்கலாம். அவர் திடீரென்று இறங்கி அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணிக்கு பயனுள்ள ரன்களை அடிக்கலாம். கடந்த பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம் தோனி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தான் எடுத்து வருகிறார். இவரும் அப்படித்தான் பந்தும் சரியாக வீசக்கூடிய வீரர். இவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினால் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

Advertisement