தடைகளை கடந்து தனது தந்தைக்காக சாதித்து சபதத்தை நிறைவேற்றிய இந்திய வீரர் – ரசிகர்கள் வாழ்த்து

Siraj 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களை குவிக்க இந்திய அணி 336 ரன்களை குவித்தது இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களை அடித்து இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதன் பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

siraj

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை 300 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது எப்போதும் சவாலான ஒரு விடயம் தான். அந்த வகையில் இந்த சவாலை விரட்டிய இந்திய அணி இன்று அசத்தலாக பேட்டிங்கை விளையாடி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக துவக்க வீரரான ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய கில் 91 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

அதன்பின்னர் புஜாரா அரைசதம் அடித்தும், ரஹானே 24 ரன்கள் குவித்தும் ஓரளவு மிடில் ஓவர்களில் தாக்கு பிடித்தனர். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த போட்டியில் விளையாடியதைப் போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 138 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 89 ரன்களை அடித்தார்.

pant

தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளை சந்தித்த நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் இறுதியில் காண்பித்த அதிரடி மூலம் இந்திய அணி பெரிய இலக்கினை சேஸிங் செய்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் டெஸ்ட் அணியில் தேர்வாகிய முகமது சிராஜ் தந்தை ஐதராபாத்தில் மரணம் அடைந்த செய்தியை அறிந்தும் தான் தனது தந்தையின் விருப்பத்திற்காக இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் இந்திய அணி வெற்றி பெற வைத்து எனது தந்தையின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவேன் என்றும் சிராஜ் சபதமேற்று இருந்தார். அவர் கூறியதைப் போலவே இந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

siraj

கடைசி போட்டியில் எந்த ஒரு முன்னணி பந்துவீச்சாளரும் இல்லாத நிலைமையில் இந்திய அணியின் தலைமை பந்து வீச்சாளராக திகழ்ந்து விக்கெட் வேட்டை நடத்திய இவர் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இந்திய அணி பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தான் நினைத்தது போலவே தனது தந்தையின் மறைவிற்கு சிறப்பான அஞ்சலியை செலுத்தி உள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த தொடரில் இனரீதியான சீண்டல் மற்றும் தந்தையின் பிரிவு என பல தடைகளைக் கடந்து அவர் இந்தச் சபதத்தை நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement