இன்றைய 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் ஏற்படவுள்ள மிக முக்கிய மாற்றம் – விவரம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டிகளிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தென்னாப்பிரிக்க அணியானது ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டி இன்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

pant4

- Advertisement -

இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் முக்கியமான ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளது.

அதன்படி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் தனது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருத்தமடையச் செய்தார். அதிலும் குறிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனது மட்டுமின்றி அதிகளவு ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக இளம் வீரரான முகமது சிராஜ் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

siraj

ஏற்கனவே புவனேஷ்வர் குமாருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்க வேண்டும் என்று அனைவரும் கூறிவந்த வேளையில் இந்த மாற்றம் நிகழவுள்ளது. இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : இந்த சீசனுக்கான ஐ.பி.எல் எப்போது துவங்கும்? எத்தனை நாட்கள் நடைபெறும் – ஜெய் ஷா அறிவிப்பு

1) ஷிகார் தவான், 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) ரிஷப் பண்ட், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) வெங்கடேஷ் ஐயர், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது சிராஜ், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement