13 வருட ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் படைக்காத அறிய சாதனையை படைத்த அசத்திய சிராஜ் – விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்த போட்டியில் 13 வருட ஐபிஎல் வரலாற்றில் யாரும் கிடைக்காத ஒரு மிகப் பெரிய அறிய சரித்திர சாதனையை பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பதிவு செய்துள்ளார். அந்த சாதனையை யாதெனில் இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசிய அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி வெறும் 8 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

இதில் அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலும் மெய்டன் ஓவராக வீசியிருந்தார். அதன் மூலம் ஒரே ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் வீரர் எண்ணற்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ். மேலும் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர்களான ராகுல் திரிப்பாதி, நித்திஷ் ராணா மற்றும் டாம் பேன்டன் ஆகியவை ஆட்டமிழக்கச் செய்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement