பவர்பிளே ஓவர்களில் நாங்க செய்ஞ்ச அந்த தப்பு தான்.. பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – கில் வருத்தம்

Gill
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பதிவு செய்ததோடு சேர்த்து புள்ளி பட்டியலிலும் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து குஜராத் அணியை போட்டியின் ஆரம்பத்திலிருந்தே கட்டுக்குள் வைத்தது. குறிப்பாக முதல் 10 ஓவர்களில் பெரிய அளவு ரன்கள் செல்லாத வேளையில் எப்படியோ சமாளித்த குஜராத் அணியானது 19.3 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

இந்த மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை முதலில் இரண்டு ஓவர்களில் பார்க்க நினைத்தோம். அதன் பிறகு அதில் கிடைக்கும் ஐடியாவை வைத்து விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இந்த மைதானத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

- Advertisement -

நாங்கள் பவர் பிளவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது. இந்த போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டதாலே இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை களம் இருக்கிறோம். ஆனால் அதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையும் நாங்கள் இழந்து விட்டோம். அடுத்த போட்டியில் மீண்டும் இந்த தோல்வியை பற்றி நினைக்காமல் புதிதாக ஆரம்பிப்பது போல் ஆரம்பிக்க உள்ளோம். இந்த தோல்வி வருத்தம் அளித்தாலும் அதனை கடந்து சென்றாக வேண்டும்.

இதையும் படிங்க : கொஞ்ச நேரத்துல 4 விக்கெட் விட்டதும் கொஞ்சம் பதட்டமாயிடுச்சி.. குஜராத் அணிக்கெதிரான வெற்றி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

இந்த போட்டியின் மூலம் நிறைய பாசிட்டிவான விடயங்களை எடுத்துச் செல்கிறோம். இனிமேல் நாங்கள் இதே போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடத்தை தந்துள்ளது. இதற்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் அடுத்தடுத்து போட்டிகளை எதிர்கொள்ள உள்ளோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement