சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான எனது அதிரடிக்கு இதுவே காரணம் – சுப்மான் கில் பேட்டி

Gill 3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் (எட்டாவது லீக்) 8 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை குவித்தார். வார்னர் 36 ரன்களையும், சஹா 30 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது.

இந்த சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. துவக்க வீரரான சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் மோர்கன் 29 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி வெற்றி பெற உதவினார் .ஆட்டநாயகனாக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார்.

morgan

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் சுப்மான் கில் கூறுகையில் : நாங்கள் பேட்டிங் செய்யும் போது பந்து பெரிய அளவில் திரும்பவில்லை. அதனால் என்னால் பந்துகளை எளிதாக அடிக்க முடிந்தது. மேலும் கடந்த இரண்டு வருஷங்களாக பவர்ஹிட்டிங் பயிற்சியை தனியாக எடுத்து வருகிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் இதுபோன்ற பவர் ஹிட்டிங் அவசியம். நாங்கள் பந்துவீசும் போது சிறப்பாகவே பந்து வீசினோம்.

gill

ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது. நான் மோர்கனிடம் அதிக அளவு கலந்துரையாடவில்லை. எங்களது முழு எண்ணமும் பவுலர்களுக்கு நெருக்கடியை கொடுத்து ரன்களை குவிக்க வேண்டும் என்பதுதான். ஒரு துவக்க வீரராக நான் என்னுடைய கடமையை எனது அணிக்காக தொடர்ச்சியாக வழங்க விரும்புகிறேன் என்று கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement