சரியான நேரத்தில் சுப்மன் கில் செய்த சம்பவம்.. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட கிடைத்த லக் – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரரான சுப்மன் கில் கடந்த சில ஆண்டுகளாகவே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை சற்று சுமாரான ஆட்டத்தையே இதுவரை வெளிப்படுத்தி வந்தார்.

அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரருக்கான இடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு தன்னை மாற்றிக் கொண்ட சுப்மன் கில் கடந்த 13 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

அதேபோன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் காரணமாக இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவருக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என்ற இக்கட்டான நிலை கூட அவரது எதிரில் இருந்தது. ஆனால் முக்கியமான அந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான நேரத்தில் சதம் அடித்ததால் அவரது இடம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது அழுத்தமான நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி சதம் அடித்த சுப்மன் கில் தனது திறனை நிரூபித்துள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியில் நீடிப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தொடரின் பாதியிலேயே இங்கிலாந்து வீரராகள் இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்? – காரணம் இதோ

ஒருவேளை அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதத்தை அடிக்காமல் போயிருந்தால் நிச்சயம் அவரை வெளியேற்றி மீண்டும் அனுபவ வீரரான புஜாராவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்திருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement