உங்க திறமைக்கு இப்படி சொதப்புவது நியாயமில்ல.. இளம் இந்திய வீரர் மீது சல்மான் பட் ஏமாற்றம்

Salman Butt 4
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இந்த தொடரில் முதல் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் சுமாராக செயல்பட்டதால் 2வது போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஜெய்ஸ்வால் வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 68 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற உதவினார். மறுபுறம் கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் விராட் கோலிக்கு பின் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.

- Advertisement -

திறமை இருந்தும்:
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு நிகராக அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 போட்டிகளில் வெறும் 32 ரன்களை 25.77 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக 2023 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்த 126 ரன்களை கழித்தால் டி20 கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிவரம் இன்னும் படுமோசமாக இருக்கிறது.

இந்நிலையில் சிறப்பான திறமை இருந்தும் அதற்கு தகுந்தார் போல் கில் செயல்படவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில ஆட்டங்களில் சுப்மன் கில் தன்னுடைய திறமைக்கு அநீதி இழைத்து விட்டார் என்று நினைக்கிறேன். சிறந்த வீரரான அவர் இந்தளவுக்கு காட்டும் அவசரத்திற்கு தேவையான திறமையை கொண்டுள்ளார்”

- Advertisement -

“இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் 20+ ரன்கள் எடுக்கும் அவர் பின்னர் சுமாரான ஷாட்டை அடிக்கிறார். ஆனால் கடந்த வருடம் வெற்றிகரமாக செயல்பட்ட போது அவர் இப்படி பேட்டிங் செய்யவில்லை. என்னை கேட்டால் அவர் எதையும் ஸ்பெஷலாக முயற்சிக்காமல் தன்னுடைய திறமைக்கு சாதாரணமாக விளையாடினாலே போதும்”

இதையும் படிங்க: மிடில் கிளாஸ் குடும்பம்.. நம்பவே முடியல.. தோனியின் அட்வைஸ் ஹெல்ப் பண்ணும்.. துருவ் ஜுரேல் பேட்டி

“குறிப்பாக உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நாம் அனைத்து பந்துகளையும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் விளையாடக் கூடாது என்பதை அவர் உணர வேண்டும். நீங்கள் இப்படித் தான் விளையாட வேண்டும் என்று விளையாடாமல் பந்தை பார்த்து அதற்கு தகுந்த ரியாக்சன் கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்படும் பட்சத்தில் உலகக் கோப்பையில் கில் இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement