Shreyas Iyer : கங்குலி கூறிய இந்த அறிவுரையை வெற்றியை தேடித்தந்தது – ஐயர் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

போட்டி முடிந்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : சொந்த மைதானத்தை தவிர வெளிமைதானங்களில் ஆடும்போது எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். இந்த போட்டியில் துவக்கம் சிறப்பாக இருந்தது. தவான் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக ஆடினார் இந்த வெற்றி அணிவீரர்கள் ஆகிய அனைவர்க்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்தோம் ஆனால், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தினார்கள்.

Pant

நாங்கள் சேசிங் செய்ய இறங்கும்போது கங்குலி யார் சிறப்பாக ஆடுகிறீர்களோ அவர்கள் இறுதிவரை நின்று ஆடவேண்டும் என்று கூறினார். அதற்கு ஏற்றாற்போல் பண்ட் சிறப்பாக துவங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்து சென்றார். தவான் கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பான துவக்கத்தினை அளித்தார்.

Advertisement