இவர் உள்ளவரை எங்களுக்கு எப்போவும் வெற்றிதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

iyar
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

- Advertisement -

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஐயர் கூறியதாவது : இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றியுடன் துவங்கி இருக்கிறோம். இந்திய ஏ அணிக்காக நான் கேப்டன்சி செய்து வருவது ஐ.பி.எல் போன்ற தொடர்களில் எனக்கு பெரிதும் உதவுகிறது. இந்த போட்டியின் வெற்றி எங்கள் அணிக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.

Pant 1

மேலும், பண்ட் ஆடிய விதம் வியக்க வைத்தது. அவரை போன்றே வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும்போது எங்கள் அணி நிச்சயம் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் என்று வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement