எளிதாக வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியின் தோல்விக்கு இவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர் காட்டம்

iyar
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

Dc

- Advertisement -

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியின் தோல்வி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பேசுவதற்கு எதுமே இல்லை. பந்துக்கு ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து போட்டியை இழந்தது வருத்தமளிக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

Sam

இந்த போட்டியின் தோல்விக்கு எங்களது அணியின் பேட்ஸ்மேன்களே காரணம் தொடரின் ஆரம்பத்தில் இந்த தோல்வி ஏற்பட்டதால் பிரச்சனையில்லை. இந்த தோல்வியில் இருந்து எங்களது தவறினை புரிந்து அதனை சரிசெய்து பின்வரும் போட்டிகளில் சரிசெய்ய நாங்கள் முயற்சிப்போம். பதட்டமான சூழ்நிலையிலும் பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

Advertisement