எங்களின் வெற்றி தள்ளிப்போனதுக்கு இவர்தான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

iyar
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

Kolkata

- Advertisement -

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் : இந்த போட்டியின் வெற்றி எங்களுக்கு கடைசி ஓவரில் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சில் எங்களது வெற்றி தள்ளிப்போனது. மேலும், இறுதியில் ஆட்டம் டையில் முடிந்தது.

prithivi shaw

பிரிதிவி ஷா தனது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக ஆடினார். அவரின் சிறப்பான ஆட்டமே அணியை வெற்றி இலக்கினை நெருங்க உதவியது. மேலும், இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தினை தொடர்ந்து அணி வீரர்களிடம் எதிர்பார்க்கலாம் என்று டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement