வீடியோ : 2 மணிநேரம் மழையில் காத்திருந்து ஷ்ரேயாஸ் ஐயரை சந்தித்த ரசிகை – காத்திருந்த அன்புப்பரிசு

Shreyas-Iyer-and-His-Fan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 22-ஆம் தேதி டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

இதன் காரணமாக ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்த இந்திய அணியானது தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தீவிர பயிற்சி பெற்று வரும் இந்நிலையில் ட்ரினிடாட் நகர் முழுவதும் மழை பெய்து வருவதால் இந்திய அணியின் வீரர்கள் மூடிய கூடத்திற்குள் பெரிய ஷார்ட்டுகளை தவிர்த்து பேட்டிங் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் செய்தியினை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவர்களை காண மைதானத்திற்கு நேரில் சென்றுள்ளனர். அந்த வகையில் இன்றைய பயிற்சிக்கு முன்பாக மழை பெய்ததால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மூடிய உள்ளரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

அவ்வேளையில் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக மழை பெய்தும் அங்கிருந்து செல்லாமல் இருந்த ஒரு பெண் ரசிகை எங்கும் செல்லாமல் ஷ்ரேயாஸ் ஐயரை பார்க்க வேண்டும் என காத்திருந்தார். அவர் இப்படி கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாது காத்திருந்ததை கேள்விப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் நேரடியாக பயிற்சி கூடத்தில் இருந்து அவரை காண சென்றார்.

அப்பொழுது அந்தப் பெண் ரசிகையிடம் சில நிமிடங்கள் பேசிய பின்னர் அவர் கையில் கொண்டு வந்த சிறிய பேட்டில் தனது ஆட்டோகிராபை போட்டு அவரை மகிழ்வித்தார். ஐயரிடம் இருந்து ஆட்டோகிராப் பெற்றது பற்றி அந்த ரசிகை கூறியதாவது : நான் ஷ்ரேயாஸ் ஐயரின் தீவிர ரசிகை. இந்திய அணியின் வீரர்களின் பயிற்சியை நேரில் காணவே தான் வந்ததாக கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா உறுதி – டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

மேலும் இந்திய அணியில் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரை பிடித்திருந்தாலும் ஷ்ரேயாஸ் ஐயரை காணவே நான் இங்கு வந்து காத்திருந்தேன் என்றும் அவரிடம் இருந்து ஆட்டோகிராப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement