SRH vs DC : டாஸ் போட முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர். தடுத்த மஞ்சரேக்கர் – காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Iyer
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

இந்த போட்டியில் முதலில் டாஸ் போடுவதற்கு முன் மைதான வர்ணனையாளராக சஞ்சய் மஞ்சரேக்கர் இரு அணி கேப்டன்களையும் அறிமுகப்படுத்தி, எலிமினேட்டர் போட்டிக்கு உண்டான பில்டப்பை கொடுக்கும் முன்னர் டெல்லி அணி கேப்டன் என்று சொன்ன உடனே ஐயர் டாஸ் காயினை சுண்டினார். அதனை கவனித்த மஞ்சரேக்கர் அதனை தடுத்து இன்னும் அறிமுக வர்ணனையே முடியவில்லை அதற்குள் எவ்வளவு ஆவலா ? என்று ஐயரிடம் கூறினார்.

Iyer 1

பின்பு மீண்டும் இரு அணிகளையும் அறிமுகப்படுத்தி, போட்டியை பற்றி விளக்கிகூறிய பின்னர் மீண்டும் ஐயர் டாஸ் போட மைதானத்தில் ஒரே சிரிப்பலை எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டாசில் ஐயர் வெற்றி பெற்று சரியான முடிவான பந்துவீச்சினை தேர்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement