RCB vs RR : ஹாட்ரிக் விக்கெட் முக்கியமில்லை. எங்கள் அணியின் நலனே முக்கியம் – ஷ்ரேயாஸ் கோபால்

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு

Gopal
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக துவங்கியதால் போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை அடித்தது. கோலி 7 பந்துகளில் 25 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 63 ரன்கள் என்ற இலக்குடன் ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் முதல் அணியாக பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது.

போட்டி முடிந்து ஹாட்ரிக் விக்கெட் குறித்து பேசிய ஷ்ரேயாஸ் கோபால் கூறியதாவது : இந்த போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது எனக்கு தற்போது மகிழ்ச்சி இல்லை. ஏனெனில் இந்த போட்டியில் எங்களது அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனதே இப்போது எனக்கு கடினமாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் பிளேஆப் செல்லும் வாய்ப்பு சற்று எளிதாகி இருக்கும் என்று கோபால் கூறினார்.

Shreyas Gopal

தற்போது வரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 11 புள்ளிகள் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.

Advertisement