இஷான் கிஷானுக்கு டாட்டா.. விட்டதை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர்? ஐபிஎல் வாய்ப்பு பற்றியும் வெளியான தகவல்

Shreyas Iyer 5
- Advertisement -

மும்பையில் ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற்ற முடிந்தது. அதில் விதர்பா அணியை தோற்கடித்த மும்பை 42வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசாக காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதே போல இங்கிலாந்து தொடரில் உங்களை தேர்வு செய்வதற்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுங்கள் என்று இஷான் கிசானிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டார். ஆனால் அதைக் கேட்காததால் அந்த இருவரும் 2023 – 24 இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன் காரணமாக பின்னடைவை சந்தித்த ஸ்ரேயாஸ் பிசிசிஐ சொன்ன படி ரஞ்சிக் கோப்பைக்கு விளையாட சென்றார்.

- Advertisement -

மீண்டும் வரும் ஸ்ரேயாஸ்:
அதில் தமிழ்நாடு அணிக்கு எதிரான செமி ஃபைனலில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அவர் விதர்பாவுக்கு எதிரான ஃபைனலில் இரண்டாவது இன்னிங்ஸில் 95 ரன்கள் அடித்து அசத்தினார். இருப்பினும் லேசான முதுகு வலியால் அவதிப்பட்ட அவர் கடைசி நாளில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் முதல் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று செய்திகள் வலம் வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் அதற்குள் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியிலிருந்து விடுபட்டு விடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக முதல் போட்டியிலிருந்தே அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடுவதில் எந்த தடையும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. அதை விட பிசிசிஐ சொன்ன படி தற்போது அவர் ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடி முடித்துள்ளார்.

- Advertisement -

அதனால் 2023 – 24 இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த வருடம் கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் வழங்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவருடைய திறமை மற்றும் ஃபார்ம் மீது யாரும் கேள்வி எழுப்பவில்லை.

இதையும் படிங்க: பாண்டியா மட்டும் நிலவில் இருந்து வந்தாரா? அதை சீட்டுல எழுதிக் கொடுக்க சொல்லுங்க.. பிரவீன் குமார் விளாசல்

எனவே ரஞ்சிக் கோப்பையில் விளையாடுங்கள் என்று சொன்னதை ஸ்ரேயாஸ் ஐயர் நிறைவேற்றியுள்ளதால் அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் கிடைக்க உள்ளது. அந்த வகையில் சம்பள ஒப்பந்தத்தில் விட்ட இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆனால் அவருடன் வெளியேறிய இஷான் கிசான் கடைசி வரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் 2024 களமிறங்க உள்ளார். எனவே அவரின் சம்பள ஒப்பந்தம் கேள்விக்குறியாகவே இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement