இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வரும் வேளையில் இனி எப்போதுமே ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என்கிற கண்டனங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் கூட கிரிக்கெட்டே கிடையாது : ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி
ஏனெனில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வேளையில் இனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி எப்போதுமே விளையாடவே கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இருதரப்பு தொடர் மட்டுமல்ல ஐசிசி தொடர்களிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என்றும் இனிமேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் கிடையாது என்ற முடிவினை எடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி இனி பாகிஸ்தான் அணியுடன் எப்போதுமே இந்திய அணி விளையாடக்கூடாது. இதுவரை நடந்தது போதும் இனிமேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இன்று ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட இருக்கின்றனர்.
இதனை ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும் அதன் மூலம் உயிரிழந்தவர்களுக்கு நாம் இரங்கல் தெரிவிக்கலாம். இப்படி ஒரு வாரம் கருப்பு பட்டை அணிந்திருப்பதன் மூலம் உலகமே இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உற்று நோக்கும். கிரிக்கெட் என்பது எல்லைகளை கடந்து பல நாடுகளுக்கு சென்றடைகிறது. இந்த கருப்பு பட்டை விவகாரம் மூலம் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது உலகத்திற்கு தெரிய வரும் அதனால் மற்ற நாடுகளும் நம்முடன் துணை நிற்பார்கள்.
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் – மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் சியர் லீடர்களுக்கு தடை.. கொண்டாட்டம் கூடாது – காரணம் என்ன?
உயிரிழந்தவர்களுக்காக நாம் செய்யும் சின்ன கைங்கரியம் இதுதான் என கோஸ்வாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்தும் இரங்கல் குவிந்து வரும் வேளையில் பிரபல இந்திய வீரர்கள் பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தில் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.