நீங்கள் பண்றது அநியாயம். என்னால சும்மா இருக்க முடியாது – பாகிஸ்தான் வாரியத்தை சாடிய சோயிப் மாலிக்

- Advertisement -

கிரிக்கெட் உலகில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அதில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. சூதாட்டத்தில் அந்த அணி வீரர்கள் ஈடுபட்டது, அந்த நாட்டிற்கு விளையாட சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நட்தியது என எப்போதும் ஏதேனும் ஒரு சர்ச்சை, அந்த அணியை சுற்றிக்கொண்டே இருக்கும். தற்போது அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது, பாகிஸ்தான் அணியின் முன்னனி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் சரமாரியான குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த அணியின் மூத்த மற்றும் முன்னனி வீரராக திகழும் சோயிப் மாலிக், அந்த அணி நிர்வாகத்தின் மீதும், கேப்டன் பாபர் அசாம் மீதும் பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

azam

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், எங்களது நாட்டில் வீரர்களின் திறமையை விட, அவர்கள் யாருக்கு நெருக்கமாக உள்ளார்கள் என்பதே பெரிதாக பார்க்கப்படுகிறது. அப்படி பெரிய பதவியில் இருக்கும் நபர்களுடன் நெருங்கிய உறவில் இருக்கும் வீரர்கள் மட்டும்தான் பாகிஸ்தான் அணியில் விளையாட முடியும். இதுபோன்ற நடைமுறை மற்ற நாடுகளில் இருந்தாலும் எங்களது நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இப்பேட்டியின்போது தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் பாபர் அசாமை வெளிப்படையாகவே விமர்சித்தார். அவரைப் பற்றி சோயிப் மாலிக் கூறும்போது, பாபர் அசாம் எந்த வீரரைக் கைகாட்டுகிறாரோ, அந்த வீரர்தான் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க முடியும். இதற்கு தேர்வுக் குழுவின் ஆதரவும் முழுமையாக உள்ளது என்பதால் அவருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அவர் அணியில் சேர்க்கிறார். இதற்கு சிறந்த உதராணமாக தற்போது நடந்து முடிந்த பகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடரை குறிப்பிட்டு பேசிய அவர், ஜிம்பாப்வே தொடருக்கான கிரிக்கெட் அணியில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பாபர் அசாமிற்கு பிடிக்காத சில வீரர்களை தேர்வு செய்தது.

Pak-1

கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முடிவால் கோபமடைந்த பாபர் அசாம், தேர்வுக் குழவினருடன் சண்டைப்போட்டு அந்த வீரர்களை அணியிலிருந்து வெளியேற்றியது மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த வீரர்களை அணியில் சேர்த்துக் கொண்டார் என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்னதாக ஜுனைத் கான், முஹம்மது ஆமீர், வாஹாப் ரியாஸ் போன்ற வீரர்கள், பாகிஸ்தான் அணியில் வீரர்களின் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர். அவர்களின் வரிசையில் தற்போது சோயிப் மாலிக்கும் இணைந்திருக்கிறார்.

Pakistan 1

இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள சோயிப் மாலிக், இதனால் என் எதிர்காலத்திற்கு எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் பரவாயில்லை, என்னுடன் கிரிக்கெட் விளையாடிய மற்ற வீரர்கள், பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட்டில் நடக்கும் அநியாங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது, நானும் அவர்களுடன் இணைந்து இந்த அநியாங்களுக்கு எதிராக நிற்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement