விராட் கோலி குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி. நறுக்குன்னு ஒரே வார்த்தையில் பதிலளித்த – சோயிப் அக்தர்

Kohli and Akhtar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதன் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் திணறிவரும் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு கடைசியாக நடைபெற்ற பல தொடர்களில் கோலி சொற்ப ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வருவதால் அவர்மீது ரசிகர்களும் சற்றும் வருத்தமடைந்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்றும் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப அவர் இந்த ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்துக்களை பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒருபுறம் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சரி என்று பலர் கூறி வந்தாலும், மற்றொருபுறம் விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே டி20 உலக கோப்பையில் அவரது இடம் உறுதியாகும் அதோடு அவர் மீண்டும் பார்மிற்கு வரவும் அது வாய்ப்பாக அமையும் என்று சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

என்னதான் விராட் கோலி மீது ஏகப்பட்ட விமர்சனங்களும், அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் இருந்து வந்தாலும் கோலிக்கு ஆதரவாக பல வீரர்கள் தங்களது குரல்களை கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயப் அக்தரும் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் : ஃபார்மில் இல்லாத விராட் கோலி பற்றி ஒற்றை வார்த்தையில் உங்களது கருத்தை கூறுங்கள் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த டாப் 7 பேட்ஸ்மேன்கள்

அதற்கு பதில் அளித்த சோயிப் அக்தர் விராட் கோலிக்கு ஆதரவாக : அவர் “ஏற்கனவே ஒரு லெஜெண்ட்” தான் என்று சுவாரஸ்யமான பதிலை அளித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அவரது இந்த பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement