நேற்றைய எலிமினேட்டர் போட்டிக்கு பின்பு டெல்லி அணிவீரரான ஷிகார் தவான் சன் ரைசர்ஸ் அணி வீரர்களான முஹமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோரை வைத்து ஒரு பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த ட்வீட் :
Wishing everyone #RamadanKareem. So proud of them! It is not easy to fast the whole day & then play the match. But they make it look effortless! An inspiration for their country & the world cricket! Your energy motivates everyone to dream big. May Allah’s blessings be with you! pic.twitter.com/xoWeXmCqZu
— Shikhar Dhawan (@SDhawan25) May 9, 2019
அந்த பதிவில் இவர்கள் இருவரையும் நினைத்தால் பெருமையாக உள்ளது. ரமலான் மாதமான இந்த மாதத்தில் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து போட்டியில் விளையாடுவது சாதாரணமானது கிடையாது. ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அவர்களின் நாட்டிற்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் உதாரணமாக உள்ளனர் என்று தவான் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.