என்னய்யா கபடி கபடி ஆடிட்டு இருக்கீங்க.. காமெடி செய்த பாகிஸ்தான் வீரரை கலாய்த்த ஷிகர் தவான்

Mohammed Rizwan
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 4 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து 4 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய பாபர் அசாமுக்கு பதிலாக இத்தொடரில் சாகின் அப்படி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது தலைமையிலும் எந்த மாற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் இத்தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

கலாய்த்த தவான்:
அத்துடன் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது. முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியில் நட்சத்திர பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறிய அவர் பேலன்ஸ் இழந்து தம்முடைய கையிலிருந்த பேட்டை விட்டு கீழே விழ சென்றார்.

ஆனால் அப்போது தரையில் 2 கைகளையும் ஊன்றி பேலன்ஸ் செய்த அவர் பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். அதன் காரணமாக எதிர்ப்புறம் இருந்த வெள்ளைக் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட அவர் மீண்டும் 2வது ரன்னை எடுக்க முயற்சித்த போது எதிரணியினர் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்கள். இருப்பினும் அதற்கு அசராமல் டைவ் அடித்த ரிஸ்வான் 2 ரன்களை வெற்றிகரமாக எடுத்த மகிழ்ச்சியில் இருந்தார்.

- Advertisement -

ஆனால் அதில் சந்தேகப்பட்ட நடுவர்கள் அவருடைய ஓட்டத்தை சோதித்துப் பார்த்தார்கள். அப்போது முதல் ரன்னை எடுக்கும் போது வெள்ளை கோட்டுக்கும் முகமது ரிஸ்வான் விரல்களுக்கும் சில சென்டிமீட்டர் இடைவெளி இருந்தது தெரிந்தது. அதனால் ஷார்ட் சிக்னல் கொடுத்த அம்பயர் 2 ரன்களை கொடுக்க மறுத்து விட்டார். அதனால் ஏமாற்றமடைந்த ரிஸ்வான் இவ்வளவு வெறித்தனமாக ஓடியும் ரன்கள் கிடைக்கவில்லையே என்று தலையில் கையை வைத்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: சச்சின் இருந்தாலும் அதை தான் செய்வோம்.. இந்தியாவை வீழ்த்த.. இங்கிலாந்துக்கு ஆலன் டொனால்ட் ஆலோசனை

இந்நிலையில் கை விரல்களால் ரிஸ்வான் வெள்ளைக்கோட்டை தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த இந்திய வீரர் ஷிகர் தவான் “கபடி கபடி கபடி” என்ற தலைப்புடன் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டு ரிஸ்வானை கலாய்த்துள்ளார். குறிப்பாக “ரன் எடுக்க சொன்னால் என்னையா கபடி ஆடிக்கிட்டு இருக்கீங்க” என்ற வகையில் அவர் கலாய்த்துள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement