மும்பை அணியை தோக்கடிக்க நாம் இந்த விஷயத்தில் தயாராக இருக்க வேண்டும் – சக வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த தவான்

Dhawan 2
- Advertisement -

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இது இந்த ஐபிஎல் தொடரின் 13வது லீக் மேட்ச் ஆகும். இந்தப் போட்டியை குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் டெல்லி அணி வீரர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் அவர்,

woakes

- Advertisement -

மும்பைக்கு எதிராக நாம் விளையாட போகும் இந்தப்போட்டியில் மனரீதியாக நம்பிக்கையான அணுகுமுறையோடு விளையாட வேண்டும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்ட நினைவுகளை மறந்து விட்டு, இந்த ஆட்டத்தில் நம் யுக்திகளை சரியாக பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். மும்பை அணியானது ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளது.

எனவே அவர்களுக்கு இந்த மைதானத்தின் தன்மை மற்றும் சூழ்நிலை ஆகியவை நன்றாகவே தெரிந்திருக்கும். நாம் இப்போது தான் முதல் போட்டியை சென்னை மைதானத்தில் விளையாட விருக்கிறோம், எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் நாம் என்ன திட்டத்தை செயல்படுத்த போகிறோம் என்பதை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு அதனை போட்டியின்போது சரியாக செயல்படுத்த வேண்டும் என்று டெல்லி அணி வீரர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

டெல்லி அணியும், மும்பை அணியும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரே மாதிரியான தொடக்கத்தைத்தான் தந்திருக்கின்றன. இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி தலா இரண்டு வெற்றி, தலா ஒரு தோல்வியும் பெற்றிருக்கின்றன. ஆனால் போட்டி நடைபெற இருக்கும் மைதானத்தை பொருத்தவரை மும்பை அணிக்கு அனுபவம் அதிகம். ஏனெனில் கடந்த மூன்று போட்டியையும் மும்பை அணி இந்த மைதானத்தில் தான் விளையாடி இருக்கிறது.

ஆனால் டெல்லி அணிக்கோ இந்த மைதானத்தில் விளையாடுவது இந்த தொடரில் இதுதான் முதல் முறை. மேலும் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதற்குப் பிறகு இப்போதுதான் மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

Advertisement