இந்தியாவில் பொளந்து கட்டும் ரோகித் நியூசிலாந்து போனால் அவருடைய கதை தெரிஞ்சிடும் ரோஹித்தை விளாசும் – தெ.ஆ வீரர்

Rohith
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக ரோகித் சர்மா முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கினார்.

Rohith 1

- Advertisement -

மேலும் சிறப்பாக இந்த போட்டியில் விளையாடி ரோகித் சர்மா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். சதத்தை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் 176 ரன்களில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்தை அலட்சியமாக எதிர்கொண்ட ரோகித் அதிரடியாக ஆடினார் என்றே கூறலாம். இந்நிலையில் ரோஹித் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் பொல்லாக் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்தியா போன்ற நாடுகளில் மைதானங்கள் பிளாட்டாக இருக்கும் அதனால் ரோஹித்தால் எளிதில் பந்தை கணித்து விளையாட முடிகிறது. ஆனால் அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்து தொடரில் வந்து அங்குள்ள மைதானங்களில் அதிக ஸ்விங் மற்றும் வேகம் அதிகரிக்கும் மைதானங்களாக இருக்கும்.

Rohith 2

எனவே அங்கு ரோஹித்தால் சமாளித்து விளையாட முடியுமா என்பதை பார்த்தால் தான் தெரியும். மேலும் அதுவே அவர் உண்மையான துவக்க வீரராக எதிர்கொள்ள இருக்கும் சவாலாக இருக்கும் மேலும் அங்கு அவரால் சாதிக்க முடிகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பொல்லாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement