சி.எஸ்.கே அணிக்கு வந்த ராசி.. பவுலிங் மற்றும் பேட்டிங்ன்னு பட்டையை கிளப்பிய ஷர்துல் தாகூர் வெறியாட்டம் – விவரம் இதோ

Shardul
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 47 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் 86 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் சுமாராகவே செயல்படுவதால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதுமட்டும் இன்றி ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த வாய்ப்பும் சமீபத்தில் கைநழுவி போனது.

- Advertisement -

அதன் காரணமாக உள்ளூர் கிரிக்கெட்டில் சாதித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்கிற கட்டாயத்தில் இருந்து வருகிறார். இவ்வேளையில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஷர்துல் தாகூர் டிசம்பர் மாதம் இந்திய மதிப்பில் ரூபாய் 4 கோடிக்கு வாங்கப்பட்டார்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது தான் அவர் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவ்வேளையில் தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள ராசி தமிழக அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் 104 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து தமிழக அணிக்கு ஆட்டம் காட்டியுள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே தற்போது மும்பை அணி வலுவான நிலையில் உள்ளது. அவரது இந்த பவுலிங் மற்றும் பேட்டிங் என சிறப்பான செயல்பாட்டிற்கு காரணமே சென்னை அணியில் இணைந்த ராசி தான் என்று ரசிகர்கள் பலரும் அவரது ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : 13 ஃபோர்ஸ் 4 சிக்ஸ் 109 ரன்ஸ்.. தமிழ்நாடு அணியின் கனவை நொறுக்கிய தாக்கூர்? ரசிகர்கள் கவலை

ஒருபுறம் சிஎஸ்கே அணி வீரரான ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி என்றாலும் மற்றொருபுறம் தமிழர் அணி தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement